பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது சினிமா துறையில் இருந்து விஜய்யை அதிகம் விமர்சித்தது இயக்குனர் சேரன். தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதும், விஜய்யை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்டார். தற்போது விஜய் ஆட்சிநடத்த அனுமதி அளிக்க வேண்டும், அவருக்கு கால அவகாசம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அனைத்து மக்களையும் சேர்த்துதான், கட்சி பேதமின்றி சொல்கிறேன். நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறுபகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்தும் பார்த்தாகிவிட்டது. மக்களும் முழுக்கவே அனைவரும் புதியவர்கள் வேண்டும் என தெரிந்துதான் இந்த வாக்கை அளித்திருக்கிறார்கள்.
பதவிப் பிரமாணம் முடிந்தவுடனேயே விமர்சனங்களை முன்வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதி காப்பதே நன்று. அதற்குள் தமிழ்த்தாய் பின்னால் போய்விட்டாள், 200 யூனிட் கரன்ட் என்னாச்சு என முழங்காமல் கொஞ்சம் வேலை செய்ய விடலாம்... தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் விஜய் போடச் சொல்லி இருப்பாரா? 200 யூனிட் பிரீ என்பதில் என்ன குளறுபடி? இதெல்லாம் முதல் நாளிலேயே கேட்கலாமா?
அவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் முறையாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். விஜய் முழுக்க முழுக்க புதியவர். அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்களெடுக்கும் பொறுத்திருங்கள். அவர் புரிந்து நன்றாக செயல்பட்டுவிட்டால் நல்லதுதானே. அப்படி இல்லையென்றால் மக்களே புரிந்து மாற்றி விடுவார்கள்தானே.
இதை நான் யாருக்கு ஆதரவாகவும் வாசிக்கவில்லை. இல்லை, உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக் கூடாது. விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஓர் அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்பணிப்பை தாருங்கள்.
இவ்வாறு சேரன் பதிவிட்டுள்ளார்.