கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் தண்டேல்.. சந்து மொண்டேட்டி இயக்கினார். கார்த்திகேயா, கார்த்திகேயன் 2 உள்ளிட்ட வெற்றி படங்களையும் கொடுத்த இவர் தற்போது புதிய பீரியட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இதில் ரானா டகுபதி கதாநாயகனாக நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறாராம்.
உஜ்ஜைனியை பின்னணியாகக் கொண்டு உருவாகும் பீரியட் படம் என்றாலும் வரலாற்று படமாக இல்லாமல் சமகால கட்டத்திலும் நிகழும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த கதையை கேட்டதுமே அக்ஷய் குமார் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது