25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்கள் வரை முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகை நமீதா பிரமோத். தமிழில் உதயநிதி ஜோடியாக நிமிர் என்கிற படத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக குறைந்த அளவு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக பர்சனல் மேக்கப் மேனாக பணியாற்றியவர் பிஜீஸ் பாலன் என்பவர் இவர் திருச்சூரில் உள்ள முண்டத்திகோடு என்கிற பகுதியை சேர்ந்தவர்.
இந்த நிலையில் சமீபத்தில் முண்டத்திக்கோடு பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த கிட்டத்தட்ட 9 பேர் பலியானார்கள். அதில் இந்த மேக் அப் மேன் பீஜீஸ் பாலனும் ஒருவர். இவரது மரண செய்தி கேட்டு அதிர்ந்து போன நடிகை நமீதா பிரமோத் அவரது மறைவுக்கு தனது இரங்கல் செய்தி ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “இந்த சூழலில் என் மனநிலையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. உங்களைப் போன்ற ஒருவரை இப்படி இந்த வெடி விபத்தில் இழப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. நீங்கள் எட்டு வருடங்களாக என் மீது அக்கறை எடுத்துக்கொண்டு என்னுடைய பாதுகாப்பு, சந்தோஷம், வசதி என ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டீர்கள். அந்த வகையில் எனக்கு ஒரு சகோதரனாகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இனி நீங்கள் இல்லாமல் இன்னொரு படப்பிடிப்பில் நுழைவது என்பது எனக்கு ஒரு சவாலாக தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.