தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

தெலுங்கில் சின்னத்திரையில் வளர்ந்து வரும் ஸ்டாண்ட் அப் காமெடியன் அனுதீப் கடிகலா. தற்போது சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர், நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண், ராம்சரண், சிரஞ்சீவியின் இன்னொரு சகோதரர் நாகபாபுவின் மகளான நிகாரிகா ஆகியோரை வைத்து சர்ச்சையான ஜோக்குகளை சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.
பலரும் இது குறித்து அவருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தான் பேசியதற்காக பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அனுதீப் கடிகலா.. ஆனாலும் பிரச்சனை இத்துடன் முடியவில்லை.. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் இவர் மீது அளித்த புகாரின் பேரில் தற்போது அனுதீப் கடிகாலா கைது செய்யப்பட்டுள்ளார். தனது பெற்றோரை சந்திப்பதற்காக அவர் தனது சொந்த ஊரான பிராயக்ராஜ் சென்றிருந்தபோது போலீசார் அங்கே அவரை கைது செய்து ஐதராபாத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.