மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

ரன்வீர் சிங் நடிப்பில் திரைக்கு வந்துள்ள 'துரந்தர்-2' படம் உள்நாடு, வெளிநாடு என மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் இதுவரை இப்படம் 1,658 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக, மும்பை திரையரங்குகளில் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.
பொதுவாக ஒரு படம் மும்பையில் நன்றாக ஓடினால் அது ரசிகர்களிடையே வலுவான வரவேற்பை பெற்றுவிடும். அந்த அடிப்படையில் இந்த துரந்தார்-2 படம் மும்பை தியேட்டர்களில் இதுவரை 317 கோடி வசூலித்திருக்கிறது. இதற்கு முந்தைய சாதனையாக 'சாவா' என்ற படம் 265 கோடி வசூலித்திருந்தது. அதைவிட இப்போது துரந்தர்-2 அதிகமாக வசூலித்து மும்பை திரையரங்குகளில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக முதலிடம் பிடித்துள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் இந்த வசூலை முறியடிப்பது மற்ற படங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு, தொடர்ந்து இந்த படம் மும்பை தியேட்டர்களில் வசூலித்து வருவதால் இந்த 317 கோடி என்பது 400 கோடியை கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.