மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

கடந்த நவம்பர் மாதம் பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் 2' படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'ஓய் ஓய்' என்கிற பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் திருமூர்த்தி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் இந்த பாடல் தாங்கள் தயாரித்த 'திரிதேவ்' என்கிற படத்தில் இடம்பெற்ற திர்ச்சி டோப்பி வாலா பாடலில் பயன்படுத்தப்பட்ட இசையை அனுமதி இன்றி காப்பி அடித்து 'துரந்தர் 2' பாடலில் பயன்படுத்தியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த பிரச்சனையில் பணம் பின்னணியில் இருப்பதால். இரு தரப்பினரும் தங்களது ராயல்ட்டி மற்றும் இழப்பீடு குறித்த விஷயங்களை சமரச தீர்வு மையம் (மீடியேசன்) மூலமாக தீர்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த பிரச்சனையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஒரு மூத்த மீடியேட்டர் ஒருவரையும் நீதிமன்றம் நியமித்துள்ளது.