மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

அந்த காலத்தில் வார இதழ்களில் வரும் தொடர் கதைகளுக்கு சினிமாவுக்கான மரியாதை இருந்தது. மக்கள் ஒரு வாரம் வரை பதைபதைப்புடன் காத்திருந்து தொடர் கதைகளை படித்தார்கள். அப்படி பிரபலமான பல தொடர் கதைகள் சினிமாவானது. கல்கியின் 'பொன்னியின் செல்வன்', சாண்டில்யனின் 'கடல்புறா', இப்படி பல தொடர் கதைகள் சினிமா ஆனது. அதில் முக்கியமானது சமூக தொடர் கதையான 'அபலை அஞ்சுகம்'.
'கல்கி'யில் வெளியான இந்த தொடரை கி.ரா.கோபாலன் எழுதியிருந்தார். 'தூக்கு தூக்கி' என்ற ஒரே படத்தின் மூலம் அன்றைக்கு லட்சாதிபதியான ஆர்.கிருஷ்ணசாமி இந்த படத்தை இயக்கி, தயாரித்தார், டி.ஆர்.மகாலிங்கம், சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம், டி.ஏ,மதுரம் நடித்தனர். ஒரு சின்ன திருட்டுக்காக ஒரு மாதம் சிறைக்கு சென்று வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.