மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

'கேஜிஎப், சலார்' படங்களை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கி வரும் படத்தில் ஜுனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன.
அவற்றை மறுத்து படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் எக்ஸ் தளத்தில், “படத்தின் தோற்றம் குறித்தோ அல்லது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறித்தோ பரவி வரும் வதந்திகளில் துளியளவும் உண்மையில்லை. வழக்கமான தயாரிப்பு இடைவேளையைத் தவிர படம் திட்டமிட்டபடியே தொடர்ந்து நடந்து வருகிறது. சரிபார்க்கப்படாத தகவல்களை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதிகாரப்பூர்வமான தகவல்கள் எப்போதும் எங்களிடமிருந்தே வெளியாகும்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
பிரசாந்த் நீல் கடைசியாக இயக்கிய 'சலார்' படத்தின் முதல் பாகம் 2023ல் வெளிவந்தது. கேஜிஎப் சாயலில் வந்த அந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்பட்டது. அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்காமல் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க வந்துவிட்டார்.
ஆகஸ்ட் 2024ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மெதுவாக நடைபெற்று வருகிறது.