புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். கடந்த 23 வருடங்களாக இசை பயணம் மேற்கொண்டு வரும் ஸ்ரேயா கோஷல் தமிழிலும் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தற்போது தெற்கு மும்பையில் வொர்லி பகுதியில் சுமார் 29.7 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் ஸ்ரேயா கோஷல்.
இது குறித்த தகவல் சமீபத்தில் பத்திரப்பதிவு துறையிலிருந்து சோசியல் மீடியா மூலமாக கசிந்துள்ளது. 5000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள, 2750 சதுர அடி கட்டுமானம் கொண்ட மூன்று கார் பார்க்கிங் வசதி கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றைத்தான் ஸ்ரேயா கோஷல் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக அவர் 1.78 கோடி ரூபாய் முத்திரைக் கட்டணம் செலுத்தி உள்ளார் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.




