Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர்களுக்கு போதை பரிசோதனை செய்ய வேண்டும் : தெலுங்கானா எம்எல்ஏ பேச்சு

01 ஏப், 2026 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Actors-should-be-drug-tested-Telangana-MLA-speaks
Advertisement

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக 'போதைப் பொருள் பயன்பாடு' குறித்து பல விஷயங்கள் நடந்து வருகிறது. சினிமா சம்பந்தப்பட்ட பார்ட்டிகளில் 'போதைப் பொருள்' பயன்படுத்தப்பட்டு வருகிறது என போதைப் பொருள் தடுப்புப் போலீசார் விசாரணை நடத்தினர். முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோரிடம் இது குறித்து விசாரணை நடைபெற்றது. சிலர் மீது கைது நடவடிக்கையும் இருந்தது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில எம்எல்ஏ அனிருத் ரெட்டி நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது குறித்து பேசினார்.

“சினிமா நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதனால், அவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக போராட வேண்டும். ஒவ்வொரு நடிகருக்கும் 90 நாட்களுக்கு ஒரு முறை போதைப் பொருள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்களது படங்களை வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவர்களது படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது,” என்று பேசினார்.

அவரது பேச்சும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்கு எதிர்ப்பும், ஆதரவும் என பல கமெண்ட்டுகள் வந்துள்ளது. இது குறித்து தெலுங்கு திரையுலகம் தரப்பில் இன்னும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கூட போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சில நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை பாலியல் புகார் : மலையாள இயக்குனர் ரஞ்சித் கைதுநடிகை பாலியல் புகார் : மலையாள ... சல்மான்கான் படத்தில் கதாநாயகியாக இணைந்த நயன்தாரா சல்மான்கான் படத்தில் கதாநாயகியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap