புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

மலையாளத் திரையுலகத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளருமான ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது ஒரு நடிகை கொடுத்த பாலியல் புகாரை அடுத்து நேற்று கைது செய்யப்பட்டார். அவரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ரஞ்சித் தற்போது இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகை தான் அந்த பாலியல் புகாரை அளித்துள்ளார். மிகவும் ரகசியமான தீவிர விசாரணைக்குப் பிறகுதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கையில் கூட ரஞ்சித் பெயர் அடிபட்டு சர்ச்சையை உருவாக்கி இருந்தது.
இதற்கு முன்பு பெங்காலி நடிகை ஒருவர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2009ல் நடைபெற்றது என 2024ல் அவர் இ-மெயில் மூலம் கொச்சி போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்திருந்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்திருந்தது.




