மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

சின்னத்திரை நடிகை சுபிக்ஷா தற்போது 'வீரா' என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் 'பேமிலி படம்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அதில் சுபிக்ஷாவின் நடிப்பும் பேசப்பட்டது. அடுத்த வாய்ப்புகள் அமையாததால் தற்போதும் அவர் 'வீரா' தொடரில் நடித்து வருகிறார்.
ஆனால் விரைவில் 'வீரா' தொடரில் சுபிக்ஷாவின் கேரக்டர் முடியப்போகிறது என்றும் அவராகவே விலகி கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுபிக்ஷா கூறியிருப்பதாவது:
வீரா தொடரில் திட்டமிட்டபடி எனது கேரக்டர் முடிவிற்கு வருகிறது. நான் விரும்பினால் கேரக்டரை நீட்டிப்பதாக சொன்னார்கள் வேண்டாம் என்று கூறிவிட்டேன். தயாரிப்பு தரப்பு, சேனல் தரப்பு இரண்டிடமும் சுமுகமாக பேசி மகிழ்ச்சியாக விலகுகிறேன். காரணம் இப்போது எனக்கு சினிமா, வெப் தொடர் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. அதோடு நான் யோகி பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் விரைவில் வெளிவருகிறது. அந்த படம் எனக்கு ஒரு திருப்பத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றார்.