திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

சர்வதேச கிரிக்கெட் நடுவராக இருப்பவர் அனில் சவுத்ரி. இவர் தற்போது நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். ஹரியான்வி கேங்ஸ்டர் கீதமான "கோலி தோ சலேகி" என்ற இசை ஆல்பம் மூலமாக நடிப்பு களத்தில் இறங்கியுள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சுமன் குஹா இயக்கியுள்ளார். எபிக் பிலிம்ஸ் சார்பில் நரேஷ் ஜா தயாரித்துள்ளார்.
டயமண்ட் என்பவர் பாடிய இந்த இசை வீடியோ, சினிமா பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரோஹித் கர்ப், சாந்தினி ரவுத், ஹேமேஷ் தீட்சித் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.
கேமரா முன் தனது முதல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனில் சவுத்ரி, "நான் தொடர்ந்து ஹரியான்வியில் வர்ணனை செய்வதால் கேமராவை எதிர்கொள்ளும்போது எனக்கு பதட்டமாக தெரியவில்லை. சுமன் குஹா என்னிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவினார். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் நரேஷ் ஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பை நான் மிகவும் ரசித்தேன். நடுவராகவும் நடிப்பவராகவும் இருப்பது அவற்றின் தனித்துவமான வசீகரத்தைக் கொண்டுள்ளது" என்றார்.




