ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் எப்போதுமே தென்னிந்திய படங்கள் மீது, குறிப்பாக தமிழ் படங்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி நல்ல படங்களை மனம் திறந்து பாராட்டியும் வருகிறார். அது மட்டுமல்ல தமிழில் 'இமைக்கா நொடிகள், மகாராஜா' ஆகிய படங்களிலும் மிகச்சிறந்த வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.
இதைத் தொடர்ந்து தெலுங்கில் ஆத்வி சேஷ், மிருனாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள 'டகாய்ட்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அடி எடுத்து வைத்துள்ளார். அனுராக் காஷ்யப். அந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பாபி கொல்லி டைரக்ஷனில் சிரஞ்சீவி நடிக்கும் 158வது படத்திலும் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தெலுங்கு திரையுலகில் தற்போது பேசப்பட்டு வருகிறது.