கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

இயக்குனர் இரா.சரவணன் எழுதியுள்ள சங்காரம் நூல் அறிமுக விழாவில் நடிகர் சூரி பேசியது, ‛‛படிக்க வேண்டிய புத்தகத்தை சரியாக படித்திருந்தால், இந்நேரம் நல்ல இடத்தில் இருந்திருக்கலாம். சமீபத்தில் சமுத்திரகனி ஒரு புத்தகத்தை படி என கொடுத்துவிட்டார். ஆனால், அதை படிக்க முடியாததால் அவரை பார்க்கும் போதெல்லாம் ஓடிவிடுவேன். புத்தகம் என்பதை பொழுதுபோக்காக நினைத்துவிட்டேன். புத்தகம் என்பது சாதாரண விஷயம் அல்ல. பல சீர்திருத்தங்களை புத்தகங்கள் உருவாக்கியுள்ளது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புத்தகங்களும், கதைகளும் அழிவதில்லை. பல வரலாறுகளை புத்தகங்கள் தாங்கி நிற்கின்றன. வாசிப்பது மிகவும் முக்கியமானது. இந்த புத்தகம் சினிமாவாக உருவாக வேண்டும் என விரும்புகிறேன். நானும் இப்போது புத்தகங்கள் படித்து வருகிறேன், நிறைய கதைகள் எழுதி வருகிறேன். எனது அப்பாவின் வாழ்க்கை வரலாறை எழுதி வருகிறேன்'' என்றார்.




