ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ல் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் சிறைவாசம் அனுபவித்து, தற்போது அவர் நிரபராதி என மாவட்ட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப்பின் ஆதரவாளர்கள் பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகைகள் பார்வதி, ரீமா கலிங்கல், உள்ளிட்ட பலரும் இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் பாதிக்கப்பட்ட நடிகையுடன் பல படங்களில் இணைந்து நடித்தவரும் அவரது நண்பருமான நடிகர் ஆசிப் அலி இந்த தீர்ப்பு குறித்து கூறும் போது, “எப்போதுமே நான் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் தான் நிற்கிறேன்.. ஆனால் இந்த தீர்ப்பை மதிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நடிகை அந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து முதன் முதலாக நேரில் சென்று தனக்கு நேர்ந்த அவமானத்தை விளக்கியது பிரபல வில்லன் நடிகர் லாலிடம் தான். அவர்தான் அப்போது நடிகைக்கு ஆதரவாக போலீசில் புகார் அளிக்கும் வரை உடன் இருந்தார். தற்போதைய தீர்ப்பு பற்றி அவர் கூறுகையில், “குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று மட்டும் கூறியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு திலீப்புக்கு ஆதரவாக வந்தாலும் கூட தீர்ப்பை கடுமையாக விமர்சிக்க கூடாது என்பதால், “மாப்பிள்ளை அவர்தான்.. ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்கிற பாணியில் பலரும் நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவருக்காக குரல் கொடுப்பதுடன், தற்போது வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்றும் பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.




