‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? |
பரசுராம் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'பேமிலி ஸ்டார்' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, படம் குறித்து பல நெகட்டிவ்வான கருத்துக்களை வேண்டுமென்றே சிலர் பதிவிடுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் மேனேஜர் அனுராக் பர்வதனேனி, விஜய் தேவரகொண்டா ரசிகர் மன்றத் தலைவர் நிஷாந்த்குமார் இது குறித்து புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சில குரூப்கள், சில கணக்குகள் ஆகியவற்றின் ஸ்கிரீன் ஷாட் உடன் அந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜுவும் கருத்து தெரிவித்துள்ளார். “சில நெகட்டிவ்வான விமர்சனங்களால்தான் ஒரு தரப்பு ரசிகர்கள் படத்திற்கு வரவில்லை. அந்த நெகட்டிவ் விமர்சனங்கள், அந்த முட்டாள்தனமான விமர்சனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேரளாவில் படம் வெளியான மூன்று நாட்கள் வரை விமர்சனங்கள் போடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது போல இங்கும் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் திரையுலகம் வாழ முடியாது,” எனக் கூறியுள்ளார்.
தில் ராஜுவின் இந்தக் கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.