லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுதினம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள மலையாளப் படம் 'ஆடுஜீவிதம்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகப் போகிறது. படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த வருடத்தைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் மலையாள சினிமாதான் சில வெற்றிகளையும், தரமான படங்களையும் கொடுத்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் வரவில்லை.
'ஆடுஜீவிதம்' படத்திற்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “'ஆடுஜீவிதம்'. உயிர் வாழ்வதற்குரிய ஒரு கதையைச் சொல்ல 14 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இது போன்ற மாற்றமும், முயற்சியும் ஒன்றாக இணைவது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும். இயக்குனர் பிளஸ்ஸி, மற்றும் குழுவினர், பிருத்விராஜ், ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிருத்விராஜ் தன்னுடைய நண்பர் என்பதால் ஒரு மலையாளப் படத்திற்கு வாழ்த்து சொல்லும் சூர்யா, இது போல தமிழ் சினிமாவில் வெளிவரும் நல்ல படங்களையும் பாராட்டினால் அந்தப் படங்களும் கொஞ்சம் ஓடும்.