அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

சின்னத்திரை நடிகை பாவ்னி ரெட்டி முதல் கணவரை இழந்த சோகத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டு அதன்பின் புது வாழ்வை தொடங்கியிருக்கிறார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டான அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி அவருடன் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவள். அவர்கள் மட்டும் தான் என்னுடைய உலகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்டவர்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன். ஆனால், சிலர் அதை அசால்ட்டாக கேவலப்படுத்தி கமெண்ட் போடுகிறார்கள். நானே என் கணவரை கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதுபோல இப்போது அமீரை எப்போது கொல்ல போகிறாய்? என்று கேட்கிறார்கள்' என வேதனையுடன் பேசியுள்ளார்.