படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். விஜய்யின் 'நாளைய தீர்ப்பு' படத்தில் நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'காலா' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 'அழியாத கோலங்கள்' இரண்டாம் பாகத்தில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள தமிழ் படம் 'ஆலகாலம்'.
ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெயகி இயக்கத்தில் உருவாகி உள்ளது. ஜெயகி, சாந்தினி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயகி கூறும்போது “சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது. ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வில் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே படம். அந்த தாயாக முதன்மை கேரக்டரில் ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்” என்றார்.