'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் | லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் |
பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிவிட்டார் நடிகர் சதீஷ். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் சதீஷுக்கு பாக்கியலெட்சுமி தொடரின் கோபி கதாபாத்திரம் தான் அதிக புகழை பெற்று தந்தது. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வரும் சதீஷ் அவ்வப்போது எதாவது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'மீண்டும் நான் ரொம்ப நாட்கள் கோபி கேரக்டரில் தொடர்வேனா என்று தெரியாது. கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாரித்து வீட்டிற்கு கொண்டு வருவதற்குள் போதுமென்றாகி விடுகிறது. நாம் நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டரே இதுதான் என்று பலரும் அசிங்கமாக திட்டுகின்றனர். பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. என் ஜாதிக்காரர்கள் பலரும் இதை அனுபவிக்கின்றனர். நான் ஜாதிக்காரர்கள் என்று சொன்னது என்னை போன்ற நடிகர்களை தான். இப்போது புரிகிறதா? நான் ஏன் அடிக்கடி இண்ஸ்டாகிராமை டி-ஆக்டிவேட் செய்கிறேன் என்று?' என தன் வருத்தங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.