நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்கும் கயல் சீரியல் நடிகை | நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து | ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம் | 'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் |
தமிழில் அறிந்தும் அறியாமலும், நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும் அஆஇஈ, இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்வர் நவ்தீப். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் போதை பொருள் அதிரடி சோதனை நடந்து பல திரைப்பட நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் சிக்கினர். அப்போது நவ்தீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஒரு போலீசார் அதிகாரி, இந்த வழக்கு தொடர்பாக நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக சமீபத்தில் கூறினார். இந்த தகவலை நவ்தீப் மறுத்தார். போலீசார் தேடும் நவ்தீப் நான் இல்லை. எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் நவ்தீப் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நவ்தீப்பை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.