ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம் | 'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் | லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் |
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் அவரது 234வது படத்தை மணிரத்னம் இயக்கப்போவதாக அறிவிப்பும் வெளியானது. இதனால் இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம் தாமதமாகும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் ‛சைமா' விருது விழாவில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இயக்குநர் மணிரத்னத்திடம் ‛கமல் 234' பட அப்டேட்டினை கேட்டார். அதற்கு மணிரத்னம், “தயாரிப்பாளரிடம் கேளுங்கள்” என்றார்.
பிறகு அப்படத்தை தயாரிக்க உள்ள கமல் கூறுகையில், “ஒரு நிஜமான ரசிகன் என்ன செய்ய வேண்டுமோ அதை லோகேஷ் சரியாக செய்துவிட்டார். எந்தப் பதட்டமும் இல்லாமல் நாயகன் படத்துக்கு எப்படி வேலை பார்த்தோமோ அப்படிதான் இதற்கும் பார்த்து வருகிறோம். உங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். இந்த தாடிக்கூட அதற்காகதான். எதையெல்லாம் வளர்க்க முடியுமோ அதையெல்லாம் வளர்த்து வருகிறோம்” எனக் கூறினார்.
மணிரத்னம் - கமல் கடைசியாக 36 வருடங்களுக்கு முன்னதாக ‛நாயகன்' படத்தில் இணைந்திருந்தனர். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.