பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் ரஜினிக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. கடந்தவாரம் நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது ரூ.500 கோடி வசூலை இப்படம் எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ‛ஜெய்பீம்' ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், சர்வானந்த் உள்ளிட்ட பல நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் மெயின் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. என்கவுன்ட்டருக்கு எதிரான போலீஸ் வேடத்தில் ரஜினி நடிக்கும் இந்த படத்தில், பஹத் பாசில் அழுத்தமான வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும், மாமன்னன் படத்தைப் போலவே இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.