சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்ற இயக்குனர் ஆனார் எச்.வினோத். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்த அவர் தொடர்ந்து அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை வரிசையாக இயக்கினார். இதை அடுத்து அவர் கமல் நடிக்கும் படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. அவரும் சமீப நாட்களாக கமலுடன் இணைந்து பயணிப்பதை சில நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக பார்க்க முடிந்தது.
அதே சமயம் கமல் அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது திடீரென பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் புராஜெக்ட் கே என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் விரைவில் அவர் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனும் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படத்திற்கு முன்னதாக யோகிபாபுவை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் இயக்குனர் வினோத். இதற்காக யோகிபாபுவிடமும் கதை சொல்லி சம்மதம் பெற்று விட்டாராம். கமல் மட்டுமல்லாது தனுஷிற்கும் கதை வைத்துள்ளதாகவும் அவரை வைத்து படம் இயக்கப் போவதாகவும் வினோத் கூறி வந்த நிலையில் தனுஷும் தற்போது பிசியாக இருப்பதால் யோகி பாபுவை வைத்து படம் இயக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.