தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதில், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த சர்ச்சையானது இப்போது வரை சோஷியல் மீடியாவில் புகைந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஜோ மைக்கேல் என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றியில் முறைகேடு இருப்பதாக ஆர்.டி.ஐ பதிவு செய்திருந்தார். அதில், விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு எதிராக பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதற்கு இன்று வரை சரியான பதில் கிடைக்காத நிலையில், ஜோ மைக்கேல் அளித்த ஆர்டிஐ மனுவை திரும்ப பெற கூறி அசீமின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.