Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 கோடி மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் கைதாவாரா?

11 ஏப், 2023 - 18:41 IST
எழுத்தின் அளவு:
Will-RK-Suresh-be-arrested-in-the-15-crore-foregery-case?

தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது 'ஆருத்ரா மோசடி வழக்கு'. பல மடங்கு வட்டி தருவதாக சொல்லி பொதுமக்களிடம் ஆயிரம் கோடிக்கு மேல் பண வசூல் செய்துள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து உள்ளனர். அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீதி 5 பேரை தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷூக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாடு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் இந்த மோசடிக்கும் ஆர்.கே.சுரேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆர்.கே.சுரேஷ் சார்பில் போலீசில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அளித்துள்ள விளக்கத்தில் “ஆர்.கே.சுரேஷ் பொதுமக்களிடம் இருந்து ஆருத்ரா நிறுவனம் சார்பாக முதலீட்டுத் தொகை எதையும் பெறவில்லை. ஆனால், ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து அவர் ரூ.15 கோடியை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.

ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து அவர் பெற்ற ரூ.15 கோடிக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் இந்த வழக்கில் தற்போதுவரை குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. அவர் கண்டிப்பாக ஆஜராகி அவர் பெற்ற ரூ.15 கோடிக்கும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேசுக்கு நேரடி தொடர்பில்லை என்றாலும், ஆருத்ரா நிறுவனத்தை பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவதாக கூறி அந்த நிறுவனத்திடமிருந்து 15 கோடி ரூபாய் அவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆர்.கே.சுரேசும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கடும் போட்டிகள் இல்லாத தமிழ்ப் புத்தாண்டு 2023கடும் போட்டிகள் இல்லாத தமிழ்ப் ... பெப்சி தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டி பெப்சி தலைவர் பதவிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ellamman - Chennai,இந்தியா
13 ஏப், 2023 - 08:59 Report Abuse
Ellamman 15 கோடியில் ரொட்டிக்கு எவ்ளோ?
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
13 ஏப், 2023 - 08:57 Report Abuse
Kanthan Iyengaar எப்படிப்பட்ட ஆட்களுக்கான புகலிடமாக பி ஜெ பி திகழுது என்று நினைக்கையில் பயங்கர பெருமயா இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in