அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ரெடின் கிங்ஸ்லி மீது ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், நடிகர் ரெடின் கிங்ஸ்லியால் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லெக்பீஸ் என்ற படத்தில் நடிக்க 10 நாட்கள் கால்சீட் கொடுத்துவிட்டு நான்கு நாட்கள் மட்டுமே அவர் நடித்துள்ளார். அவரால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையை அவரிடம் இருந்து மீட்டு தருமாறும், அதுவரை அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரெடின் கிங்ஸ்லியிடம் தயாரிப்பாளர் சங்கம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.