பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், அஷுதோஷ் ரானா, டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடிக்கும் 'பதான்' ஹிந்திப் படம் நாளை(ஜன., 25) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக நடந்து வருகிறது. முன்பதிவாக மட்டும் ரூ.20 கோடிக்கு டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது. அதில் 30 சதவீதம் தென்னிந்தியாவில் புக்கிங் நடந்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 50 கோடி வரை இருக்கும் என பாலிவுட்டினர் எதிர்பார்க்கின்றனர். இந்த வார இறுதி வசூலாக மட்டும் 200 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் 5000 மல்டிபிளக்ஸ் ஸ்கீரின்களில் இப்படம் வெளியாகிறது. அவற்றைத் தவிர்த்து சிங்கிள் ஸ்கீரின்களும் உண்டு. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாலிவுட் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்படத்தின் வெற்றி அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளிவர உள்ள 'ஜவான்' படத்திற்கு பெரும் பிளஸ் பாயின்டாக அமையப் போகிறது.