‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித்குமார், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படம் தெலுங்கில் 'தெகிம்பு' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியானது. ஆனால், தெலுங்கில் எதிர்பார்த்தபடி வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 3 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று டோலிவுட் வட்டாரத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் படம் சுமார் 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாம். அதில் பங்குத் தொகையாக 1.9 கோடி கிடைத்துள்ளது. படம் லாபத்தைப் பெற இன்னும் 1.6 கோடியாவது வசூலிக்க வேண்டுமாம். அப்போதுதான் படம் லாபத்தைத் தரும் என்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக இப்படத்திற்கான ரசிகர்களின் தியேட்டர் வருகை குறைந்து காணப்படுகிறதாம்.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 'துணிவு' படம் லாபத்தைக் கொடுத்துள்ள நிலையில் தெலுங்கு மாநிலங்களில் பெரிய வரவேற்பைப் பெறாததற்குக் காரணம் அங்கு படத்தை சரியாக புரமோஷன் செய்யவில்லை என்கிறார்கள். அஜித், விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களை பான் இந்தியா படம் போல எப்போது புரமோஷன் செய்யப் போகிறார்கள் என அவர்களது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை. அந்த விதத்தில் இரண்டு ஹீரோக்களும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது ரசிகர்களுக்கும், படத்தின் வினியோக உரிமையை வாங்கியவர்களுக்கும் வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.