எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் |

உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளிவருகிறது. பல நாடுகளில் பிரிமியர் ஷோ, ஸ்பெஷல் ஷோ என இப்போதே களைகட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த வாரமே முன்பதிவுகள் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் கேமரூனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்து கொள்வதாக இருந்த பிரிமியர் ஷோ உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க முடியவில்லை.
இதுகுறித்து கூறிய அவர் கூறும்போது “ஜப்பான் புரமோசன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டோக்கியோவில் இருந்து அமெரிக்கா திரும்பியபோது கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். பல ஆண்டுகளாக பல நண்பர்களிடம் பிரியமியர் ஷோவில் சந்திப்போம் என்ற கூறியிருந்தேன். இப்போது அது நடக்காமல் போய்விட்டது. நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.




