எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் |

பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக ரச்சிதா மஹாலெட்சுமி கலந்து கொண்டுள்ளார். சீரியல்களின் மூலம் பிரபலமான ரச்சிதாவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் பிக்பாஸ் வீட்டில் அவர் மீதான எதிர்பார்ப்பும் அவருக்கு கிடைக்கும் ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரச்சிதா, தனது வாழ்க்கை பற்றி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் குழந்தையை தத்தெடுப்பது பற்றி விக்ரமனிடம் பேசும் ரச்சிதா, 'நான் 35 வயசுல ஒரு குழந்தையை தத்தெடுப்பேன். ஏன் அப்படி 35 வயச ஒரு அளவுகோல வச்சிருக்கேன்னா, அப்ப நான் இன்னும் நிறைய கத்துக்கிட்ட அனுபவம் கிடைக்கும். அதுமூலமா ஒரு குழந்தைய வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்' என்று கூறுகிறார். ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று விக்ரமன் கேட்க ரச்சிதா, 'பெண் குழந்தை தான்' என்று கூறுகிறார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் திருமண வாழ்வில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் ரச்சிதா பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் ரச்சிதாவின் கணவர் தினேஷ், ரச்சிதாவுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் பிரச்சாரம் செய்து வருகிறார். ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்னரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசுவதை பார்த்தால், அவர் தினேஷூடன் சேர்ந்து வாழ்வாரா? இல்லையா என ரசிகர்களே சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




