தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு வருடத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர், தொடர்ச்சியாக அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர் எனப் பெயரெடுத்தவர். வித்தியாசமான கதைகளில் நடித்து விமர்சகர்களாலும் பாராட்டப்படுபவர்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வசூலைக் குவிக்கவில்லை. “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன்” என தியேட்டர்களில் வெளியான அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் தற்போது 'ராம் சேது' படமும் இடம் பெற்றுள்ளது. ராமர் பாலத்தைப் பற்றிய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங் மிகச் சுமாராக இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
தொடர்ந்து நான்காவது தோல்வி என்பது அக்ஷய் குமாரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான தடைக் கற்கள்தான். இருப்பினும் அவரது கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் அவர் மீண்டும் தனது பழைய வெற்றியைப் பெறுவார் என பாலிவுட்டினர் கருதுகிறார்கள்.