ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் அறிமுகமான பிளாக் பாண்டி, தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மருத்துவம், கல்வி, ரத்ததானம் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பொருளாதார சரிவில் சிக்கியுள்ள இலங்கை மற்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு இவர் தனது உதவும் மனிதம் அமைப்பின் வழியே சில உதவிகளை செய்தார். இதனால் பிளாக் பாண்டிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. யாரிடம் அனுமதி பெற்று இலங்கைக்கு சென்றீர்கள்? என போலீஸ் தரப்பிலும், வருமானவரித்துறை தரப்பிலும் பிளாக் பாண்டியை விசாரித்து வருகின்றனர். மேலும், உதவும் மனிதம் டிரெஸ்டுக்கு வழங்கப்பட்ட 80ஜி வருமான வரி சலுகை ரத்து செய்யப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த சிக்கல் குறித்து பிளாக் பாண்டி, 'நான் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவ சென்றேன். இவ்வளவு சட்ட சிக்கல்கள் வரும் என்று தெரியாது. வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருமானவரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன்' என கூறியுள்ளார். பிளாக் பாண்டியின் உதவும் குணம் இப்படி அவருக்கே பிரச்னையானதை நினைத்து பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.