டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய அளவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் சேர்த்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்யாராய் உட்பட பல மொழி திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு மொழியிலும் வெளியாக உள்ள இந்த படத்திற்காக அந்த மொழிகளை சேர்ந்த பிரபல ஹீரோக்கள் டிரைலர் மற்றும் படத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில் இந்த படத்தின் மலையாள டிரைலருக்கு நடிகர் பிரித்விராஜ் குரல் கொடுத்திருந்தார். இதன் மலையாள வெர்சனில் படம் ஆரம்பிக்கும்போது இதன் கதையை சொல்லி படத்தை துவங்கி வைக்கும் விதமாக குரல் கொடுத்து இருக்கிறார் நடிகர் மம்முட்டி. கேரளாவில் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின்போது இந்த விஷயத்தை கூறி இந்த இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் மம்முட்டியும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் பிரித்விராஜும் நடித்திருந்தனர். அந்த நட்புக்காக தற்போது இவர்கள் இருவரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்.