தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவுதம் மேனன் இயக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடத்திற்கு பிறகு தற்போது வெளியாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பெரிய அளவில் பாசிட்டிவான விமர்சனங்களை வந்துள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்வையும் சமீபத்தில் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். தெலுங்கில் லைப் ஆப் முத்து என்கிற பெயரில் இந்த படம் வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு புரொமோஷன் நிகழ்ச்சியில் தெலுங்கு தொகுப்பாளர் ஒருவர் கவுதம் மேனனிடம் கேள்வி கேட்கும்போது தவறுதலாக மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தை மனதில் நினைத்துக் கொண்டு சிம்பு, விஜய்சேதுபதி இவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து படம் இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார்.
ஆனால் கவுதம் மேனன் இதுபற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் உடனே மணிரத்னமாக மாறி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி என அனைவரையும் ஒரே பிரேமில் வைத்து இயக்குவது சவாலான விஷயம் தான் என்றாலும் மணிரத்னமாக இருந்ததால் அதை இயக்குவது சுலபமாக இருந்தது என்று பதில் அளித்தார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தவறுதலாக கேள்வி கேட்ட தொகுப்பாளரை கோபித்துக்கொள்ளாமல் அதேசமயம் சற்று நையாண்டியுடன் இந்த கேள்விக்கு இயக்குனர் கவுதம் மேனன் பதில் சொன்னது நெட்டிசன்கள் பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.