வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மின்னல் முரளி. டொவினோ தாமஸ் மற்றும் தமிழ் நடிகர் குருசோமசுந்தரம் இருவருமே இந்த படத்தில் சூப்பர்மேன் பவர்கொண்ட ஹீரோ மற்றும் வில்லன் என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்திற்கு ஜஸ்டின் மேத்யூ என்பவர் இன்னொரு கதாசிரியருடன் இணைந்து கதை எழுதியிருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் எழுதிய கதையை பிரபல பாலிவுட் இயக்குநரும். தயாரிப்பாளருமான அஸ்வினி ஐயர் திவாரி தயாரிக்கிறார்..
2016-ல் அமலாபால் நடிப்பில் தமிழில் வெளியான அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் தான் அஸ்வினி ஐயர் திவாரி. இந்த படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் இவர், தனது அம்மா தான் வளர்ந்து வந்த காலகட்டத்திலே மலையாள படங்களை பார்க்க தன்னை உற்சாகப்படுத்தினார் என்றும் அதைத் தொடர்ந்து தான் தற்போது மலையாளத்தில் படம் தயாரிக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.