ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்ஜே வைஷ்ணவி சின்னத்திரையில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமானார். அஞ்சான் என்பவரை காதலித்து வந்த வைஷ்ணவி, கடந்த 2019ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், வைஷ்ணவி அஞ்சானை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆறு வருடமாக அஞ்சானுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, நாங்கள் இருவரும் இப்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன் ஆனாலும், உறவின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் எங்களை நாங்களே இழக்காமல் இருக்க வேண்டுமென தீர ஆலோசனை செய்துவிட்டு அதன்பின்னர் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்களுக்குள் பல பொதுவான மற்றும் பகிர்ந்துகொண்ட விருப்பங்கள் அனைத்தும் நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக இருப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டோம். எங்களுக்குள் எந்தவித மனக்கசப்பும் இல்லை. தேவையில்லாமல் எதையும் யூகித்து பரப்ப வேண்டாம்.' என அதில் தெரிவித்துள்ளார்.