அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்துக்காக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டு வரும் பிரமாண்ட ஜெயில் செட் அமைக்கும் பணிகள் முடிவடைய தாமதமாகி வருகிறதாம். அதனால் அடுத்த மாதத்தில் பூஜை நடத்திவிட்டு அதற்கு அடுத்த மாதம் செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.