டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் ஒரு சுரங்க என்ஜினீயர். 1989ம் ஆண்டு மேற்கு வங்க சுரங்கம் ஒன்றில் அவர் பணியாற்றியபோது சுரங்கத்தில் பணியாற்றிய நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கியபோது அதனை தனது சமயோசித மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அவர்களை மீட்டார். இதனால் அவர் மேற்கு வங்க மாநிலத்திலும், பஞ்சாபிலும் நிஜ ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். 2019ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.
அவரது வாழ்க்கை தற்போது சினிமாவாகி வருகிறது. இதில் ஜஸ்வந்த் சிங்காக அக்ஷய்குமார் நடிக்கிறார். நிஜ ஜஸ்வந்த் சிங் லண்டனில் படித்தவர். அந்த காட்சிகள் இப்போது லண்டனில் படமாகி வருகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார்.
இந்த நிலையில் அக்ஷய்குமாரின் ஜஸ்வந்த்சிங் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்ஷய் குமர் வைத்திருக்கும் செயற்கை தாடியும், முதிர்ச்சியான முகமும் சற்றும் ஜஸ்வந்த்சிங் போன்று இல்லை என்றும், செயற்கையான மேக்அப் மூலம் அக்ஷய்குமார் நடிப்பதை விட ஜஸ்வந்த்சிங் தோற்றம் கொண்ட ஒருவரை கொண்டு படத்தை எடுக்கலாம் என்றும் இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மாமன்னன் பிருத்விராஜின் தோற்றத்தை கெடுத்தது போன்று ஜஸ்வந்த் சிங் தோற்றத்தை அக்ஷய்குமார் கெடுக்க வேண்டாம் என்றும் கூறிவருகிறார்கள்.