என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஆமீர்கான் ஆகியோருக்கு அடுத்தடுத்து தன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' நடிகரான ராம் சரண். சல்மான்கான் தற்போது தன்னுடைய 'கபி ஈத், கபி தீவாளி' ஹிந்திப் படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார்.
அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் ராம் சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களை ராம்சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். இது மூன்று தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் அது போல ராம்சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து சல்மான், ஆமீர் ஆகியோருக்கு தனது வீட்டில் விருந்தளித்தது குறித்து ராம்சரண் மனைவி புகைப்படங்களுடன் இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார் ராம்சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி. அதில் நடிகர் சல்மானும் கலந்து கொண்டார்.