டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
தமிழ்நாட்டில் பிறந்து மலையாளத்தில் அறிமுகமாகி இப்போது தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறவர் சாய்பல்லவி. அவர் நடித்த விராட பர்வம் நிகழ்ச்சியில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் அவரை லேடி பவன்கல்யாண் என்று அழைக்க பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை லேடி பவர் ஸ்டார் என்று அழைக்க, இப்போது அவர் தெலுங்கில் லேடி பவர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால் இந்த பட்டம் எனக்கு வேண்டாம் என்கிறார் சாய்பல்லவி.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது பெயருக்கு முன்போ, பின்போ எந்த பட்டமும் போட்டுக் கொள்வது சரியல்ல. நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் எனக்கு போதும். தயவு செய்து என்னை லேடி பவர் ஸ்டார் என அழைக்காதீர்கள். இது போன்ற பட்டங்கள் என்னை ஈர்க்காது. ரசிகர்களின் அன்பினால் வளர்ந்தேன். அவர்களுக்காக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நான் சாதாரணமாக இருக்கவே விரும்புகிறேன். இதுபோன்ற பட்டங்களால் மனதில் நெருக்கடிதான் ஏற்படுமே தவிர அதனால் வேறு எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.