ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவா இயக்கத்தில் ‛அண்ணாத்த' படத்தில் நடித்த ரஜினி அதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். சமீபகாலமாக தான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. அதன் காரணமாகவே பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அந்த படத்தில் வலுவான திரைக்கதையை அமைக்காததால், இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு தனது ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நியமித்திருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கே. எஸ் .ரவிக்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் இறுதியிலிருந்து ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. அதோடு இந்த படத்தை மூன்று மாதங்களில் நடித்து முடிக்கவும் ரஜினி திட்டமிட்டிருக்கிறார். அதன் காரணமாக இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளிடமும் மூன்று மாதத்திற்கு மொத்தமாக கால்சீட் வாங்கி உள்ளனர்.