பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவரது மனைவி சுப்ரியா மேனன். மும்பையில் பத்திரிக்கை நிருபராக பணிபுரிந்த இவரை ஒரு பேட்டியின்போது சந்தித்த பிரித்திவிராஜ், இவருடன் காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டார். பிரித்விராஜ் பிசியான நடிகராகவும், இயக்குனராகவும் மாறிவிட்ட நிலையில் சுப்ரியா மேனன் பிரித்விராஜ் புரடக்சன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுப்ரியா, மறைந்த தனது தந்தை குறித்து சமீபத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் எதற்கு சோசியல் மீடியாவை இப்படி சோகமான பதிவுகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்..? இப்படி பதிவிடுவதால் உங்கள் தந்தை வந்துவிடப் போகிறாரா என்ன என கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது கேள்விக்கு கொஞ்சமும் கோபப்படாமல், “இன்னும் இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்திருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். சோசியல் மீடியா என்பது சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு அல்ல.. உங்களுக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் கமெண்ட் செய்வதற்கு பதிலாக, என்னை பின்தொடர்வதை நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார்க்க போகலாம்.. எதற்காக நேரத்தை வீணாக செலவிடுகிறீர்கள்” என்று நாகரிகமாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதுடன் அப்படி கேள்வி கேட்ட நபரையும் மற்ற நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.