அழியாத கோலங்களாய் தலைமுறைகள் கடந்து வாழும் பாலுமகேந்திரா | ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளன. இதில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் கேஜிஎப் -2 படம் உலகம் முழுவதும் 1200 கோடி வசூல் செய்திருக்கிறது. கன்னட படங்களில் இது மிகப்பெரிய வசூல் சாதனை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே கேஜிஎப்-3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அப்படக்குழு ஒரு தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளன. மேலும் கேஜிஎப்-3 படத்தை 2024ம் ஆண்டு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் இருந்து இந்த மூன்றாம் பாகத்தில் மாறுபட்ட கெட்டப்பில் யஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.