ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை |
விமான பணிப்பெண்ணாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் அஞ்சலி நாயர். நெடுநல்வாடை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடித்த டானாக்காரன் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது காலங்களில் அவள் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவுசிக் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.
அஞ்சலி நாயர் கூறியதாவது: நெடுநல்வாடை படத்திற்கு பிறகு டானாக்காரன் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் கொரோனா வந்தது. அதனால் தமிழில் ஒப்பந்தமான சில படங்களில் நடிக்க முடியவில்லை. சில மலையாள படங்களில் நடித்தேன். தற்போது காலங்களில் அவள் வசந்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறேன். திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பது உண்மையான காதலா, திருமணத்திற்கு பிறகு காதலிப்பது உண்மையான காதலா என்பதை காமெடி, ரொமான்ஸ் கலந்து சொல்லும் படம் இது. விரைவில் அடுத்து நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்படும். என்றார்.