ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்திற்கு முன்பு ஒரு காலகட்டத்தில் நடிகை சமந்தா டாட்டூ வரைந்து கொள்வதில் ரொம்பவே ஆர்வம் காட்டி வந்தார். தான் அறிமுகமான ஏ மாய சேசாவே என்கிற படத்தில் நடித்ததன் ஞாபகார்த்தமாக முதன்முறையாக ஒய்எம்சி என்கிற டாட்டூவை குத்திக்கொண்டார். அதன் பிறகு நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டபின் அவரது பெயரையும் இரண்டு முறை பச்சை குத்திக் கொண்டு இது எங்கள் காதலின் நினைவுச் சின்னம் என்று அப்போது பெருமிதத்துடன் கூறினார் சமந்தா.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எந்த விதமான டாட்டூக்களை குத்திக் கொள்ளலாம் என முன்பு ஐடியாக்கள் வைத்திருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா, “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? என்னுடைய இளமை காலத்தில் நான் ஒருபோதும் டாட்டூ குத்திக்கொள்ள கூடாது என்பதில் மிகத்தீவிரமாக இருந்தேன்” என்று பதில் அளித்துள்ளார்.