ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிலும் தனது முக்கிய பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை சவுகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகிலும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த பத்மஸ்ரீ விருதை சவுகார் ஜானகிக்கு வழங்கி கவுரவி்த்ததற்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வார்த்தை தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சிதான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசை கிண்டல் செய்யும் விதமாக ஒன்றிய அரசு என்கிற பெயரில் அழைத்து வருகிறது. இப்படி அழைப்பது ஏற்கனவே பல தரப்பினரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு கலைஞர், அதிலும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் என்பவர் மத்திய அரசு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்று கூறுவது ஒரு சார்புத்தன்மை உடையதாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.