டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிந்துவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் ஓடிடி வெர்ஷன் விரைவில் வெளியாகவுள்ளது. ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயருடன் வெளியாகும் அந்த நிகழ்ச்சி, 45 நாட்கள், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள முந்தைய சீசன்களின் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் முதலில் ஓவியா ஓகே சொன்னதாகவும், அதன்பின் உடல்நிலை சரியில்லை என தட்டிக்கழித்து வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அதேபோல் சிநேகன், திருமணமானதை காரணம் காட்டி போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சிநேகன் கலந்துகொள்ளவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வெளியாகியுள்ள பிக்பாஸ் அல்டிமேட் புரோமோவில் புகழ் மற்றும் தீனா நடித்துள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர் குறித்த க்ளூ கிடைத்துவிட்டதாக சொல்லும் தீனா ஒரு யானையின் படத்தை காண்பிக்கிறார், புகழின் கையில் சோளப்பொரி உள்ளது. இரண்டையும் லிங்க் செய்து காட்டுப்பயலே பாடலை எழுதிய கவிஞரை பற்றி பேசும் இருவரும் சிநேகனை மறைமுகமாக குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர் சிநேகன் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அடுத்த போட்டியாளர்கள் யார் என்கிற க்ளூ அடுத்த புரோமோக்களாக வெளியாகவுள்ளது.