'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருபவர் கண்மணி மனோகரன். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து தற்போது சின்னத்திரை நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் சின்னத்திரை நடிகருடன் இவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது. தற்போது அவர் புது சீரியல் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக உருவாகி வரும் அந்த தொடரில், கலர் தமிழ் சேனலில் மாங்கல்ய தோஷம் தொடரில் நடித்த அருண் பத்மநாபன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி மனோகரன் ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.